Saturday, February 2, 2013

இடம் பெயர்தல்




Painting by S.Ilayaraja
Pic courtesy: alraja.blogspot.in

இறுக்கமான முகத்தை தவிர்த்து
இதழ்கள் விரித்து சிரிக்க வேண்டும்

சுடிதாருக்கு துப்பட்டாவும்
சுருட்டை முடிக்கு சீயக்காயும்
போட வேண்டும்

ஆற்றுத் தண்ணீரை அடுப்பில் வைத்து
ஆரிய பின் குடிக்க வேண்டும்

பக்கத்து வீட்டுக்காரருடன்
பேசிப் பழக வேண்டும்

பிழைக்க நகரம் வந்த எனக்கு
விடுமுறைக்கு ஊருக்குத் திரும்ப
பயமாக இருக்கிறது,

நான் மீண்டும்
நானாக மாற வேண்டுமே...



- வைஷ்ணவி பிரசாத்

No comments:

Post a Comment